Every year 1000s of innocent Indian husbands are charged with false DOWRY cases. Their innocent parents, young sisters & mothers are arrested, jailed without warrant. Some have died. Some have committed suicide unable to bear injustice. The law that was made to protect vulnerable women is being misused by unscrupulous women with connivance of others

Sunday, May 24, 2009

சாவு, காயம், பசி

பாவம் யாழ் வாழ் அப்பாவிப் பொதுமக்கள்... சாவு, காயம், பசி என என்னென்ன துன்பங்களோ ?

அகதி முகாம்களில் போதுமான கழிவறைகள் போலும் இல்லை என இலங்கை அரசே ஒப்புகிறது ... தண்ணீர் , மருந்துகள் ..கேட்கவே வேண்டாம்

வானில் இருந்து பாத்தோம் ... அதிகமாய் யாரையும் காணோம் என்கின்றனர் போய் பார்த்த ஒன்று இரண்டு ஐ நா சபையினர்.... கிராமம் கிராமமாய் அழிக்கப்பட்டும் ஓடிப்போயும் சமூகங்கள் வேர் அறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றல்ல இரண்டல்ல.... மூன்று லெட்சம் இந்திய வம்சாவளியினர் அகதி முகாம்களில்

இறைவா ஏன் இந்த அவலம் .... ?

100 அமேரிக்கர்களுக்கோ, 100 பிரிட்டானியர்களுக்கோ இதே கதி ஏற்பட்டால் அமேரிக்காவும் பிரிட்டனும் என்ன என்ன செய்யும் ? ஆனால் ...இந்தியர்கள் கதி ?

நான் புலிகளின் அபிமானி அல்ல... தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை...

ஒரு தனி மனிதன் என்ற விதத்தில் இதை இடுகிறேன்


மனவருத்தத்துடன்
விநாயக் (இணையப்பெயர்)

0 comments: